Karnataka: இன்று சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறுகிறது!

Last Updated : May 12, 2018, 05:39 AM IST
Karnataka: இன்று சட்டசபை தேர்தல் வாக்கு பதிவு title=

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியும், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியில் பங்குபெறும் நோக்கில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி செயல்படுவதால் இந்த 3 கட்சிகள் நடுவே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் மொத்தம் 4.98 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாகும். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் சுமார் 2.44 கோடியாகும். மொத்தம் 4,552 திருநங்கைகள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட பிற மாநில எல்லை பகுதிகளில் எராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்தலை ஒட்டி மாநிலம் முழுக்க 55,600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 3.5 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளனர். செல்போன் ஆப் மூலம் எந்த வாக்குசாவடியில் கூட்டம் அதிகம் உள்ளது என்பதை அறியவும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு மட்டுமே நாளை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறாது. 

அதேபோன்று, பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதியில் ஆயிரக்கணக்கில் வாக்காளர் அட்டைகள் சிக்கியதால் தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிக்கு வருகிற மே மாதம் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், 31 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 

அடுத்தாண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முக்கிய முன்னோட்டமாக கர்நாடக தேர்தல் பார்க்கப்படுவதால், இந்த தேர்தலுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏனெனில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இம்முறை கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு பொது கூட்டத்தில் பேசினார். 

அதேபோன்று, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரதமர் மோடி கிட்டத்தட்ட 15-க்கு மேற்ப்பட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News