IPL-2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கும் புதிய வீரர்!

இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்துள்ளார்...!

Last Updated : Apr 10, 2018, 12:19 PM IST
IPL-2018: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கும் புதிய வீரர்!  title=

IPL தொடரின் 11-வது சீசனின் முதல் போட்டி நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

இப்போட்டியில் CSK அணியில் களமிறங்கிய கேதர் ஜாதவ் காயம் காரணமாக ஆட்டத்தின் 13-வது ஓவரில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.  இதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

எனினும் பின்னர் களமிறங்கிய வெயின் பிராவோ அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி நோக்கி சென்றது எனினும் பிராவோ விக்கெட்டை இழக்க கடைசி ஓவரில் கேதர் ஜாதவ் மீண்டும் இறங்கி அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

ஆட்டம் முடிந்த பின்னர் கேதர் ஜாதவின் காயம் குறித்து ஆராயப்பட்டது. அப்போது காயத்தின் வீரியம் ஹாம்ஸ்ட்ரிங்கின் 2-வது கிரேடு எனத் தெரியவந்துள்ளது. இதனால் IPL - 2018 தொடரில் இருந்தே கேதர் ஜாதவ் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு வீரர்களை இழந்துள்ள சிஎஸ்கே அணிக்கு, மாற்று வீரராக சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு வில்லி சம்மதித்துள்ளார்.  ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னர், மிச்சேல் சாண்ட்னரை இழந்த சிஎஸ்கே, முதல் போட்டியில் காயம் காரணமாக கேதர் ஜாதவை இழந்தது. 

இங்கிலாந்து கிரிக்கெட் லீகில், யார்க்ஷைர் கவுன்டி அணியில் சேர்ந்த வில்லி, சென்னை அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இன்னும் சில நாட்களில் இங்கிலாந்து லீக் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், தற்போது அவர் சென்னையில் சேர்ந்துள்ளார். ஆல் ரவுண்டரான வில்லி,  2016-ம் ஆண்டு நடந்த டி-20 உலகக்கோப்பையில் மிக சிறப்பாக விளையாடினார்.

அதன்பின் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பழைய ஃபார்மை அவரால் கொண்டு வர முடியவில்லை. தற்போது மீண்டும் டி-20-யில் தனது திறமையை காட்ட தயாராகியுள்ளார். 

Trending News