திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறதா?

திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!

Last Updated : Jul 30, 2019, 07:00 AM IST
திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறதா? title=

திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது!

முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா, கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை நீக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. எனினும் மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. 

கடந்த மோடி ஆட்சியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோதும், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

சமீபத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதியானது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே, மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 21-ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மசோதா மீது கடந்த ஜூலை 25-ஆம் நாள் மக்களவையில் விவாதம் நடைபெற்றது.

விவாதத்திற்கு பின்னர், திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் விநியோகிக்கப்பட்ட சீட்டுகள் மூலம் வாக்களிப்பு நடைப்பெற்றது. வாக்களிப்புக்கு பின்னர் மக்களவையில் திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று திருத்தப்பட்ட முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே பாஜக-வின் அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களும் இன்று அவையில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News