நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி; 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணி நடத்தி வருகின்றனர்! 

Last Updated : Nov 30, 2018, 12:08 PM IST
நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி; 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!  title=

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி இன்று பேரணி நடத்தி வருகின்றனர்! 

வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் சங்கத்தினைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இன்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போவதாக அறிவித்திருந்தன. அதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் திரண்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் நேற்று டெல்லி வந்தனர். ரெயில்களிலும், பஸ்களிலும், பிற வாகனங்களிலும் வந்த அவர்கள் போராட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்துக்கு பேரணியாக சென்றனர். ஒருங்கிணைப்பு குழுவின் முக்கிய நிர்வாகிகளின் ஒருவரான ‘சுவராஜ் அபியான்’ தலைவர் யோகேந்திர யாதவ் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பேரணியில் பங்கேற்றனர்.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆம்ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து, தேசிய தென்இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து ராம்லீலா மைதானம் சென்றனர்.  இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணியாக விவசாயிகள் நாடாளுமன்றம் நோக்கி சென்றனர். விவசாயிகள் பேரணியையொட்டி, 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இதே போன்று டெல்லியில் விவசாயிகள் தடையை மீறி பேரணி நடத்திய போது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் விரட்டிகப்பட்டது குறிப்பிடதக்கது! 

 

Trending News