சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது!

Last Updated : Jul 4, 2017, 10:00 AM IST
சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது! title=

ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர் சென்னையில் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். 

சென்னை மண்ணடியில் செல்போன் கடை வைத்திருக்கும ஹாரூன், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி அனுப்பியதாக வந்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலை அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த பிப்ரவரி மாதம் மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது இக்பால் என்பவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி அனுப்பியதாக வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தற்போது ராஜஸ்தான் சிறையில் உள்ளார். 

அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தற்போது ஹாரூன் கைது செய்யப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து தற்போது சென்னையில் முகாமிட்டு வேறு யாராவது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டி அனுப்பி வருகிறார்களா என்று ஹாரூனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட கைதுகள் இருக்கும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Trending News