சோபியான் என்கவுண்டர்: தொடரும் துப்பாக்கி சண்டை; 2 வீரர்கள் பலி;

Last Updated : Aug 13, 2017, 11:24 AM IST
சோபியான் என்கவுண்டர்: தொடரும் துப்பாக்கி சண்டை; 2 வீரர்கள் பலி;  title=

ஜம்மு-காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பதுங்கிக் இருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

சோபியான் மாவட்டம் அமைத்துள்ள அவ்நீரா கிராமத்தில் பதுங்கிக் இருந்த பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த இருதரப்பு துப்பாக்கி சண்டையில் இரண்டு வீரர்கள் மரணம் அடைந்தனர். மேலும் காயம் அடைந்த வீரர்களை அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 

இருதரப்பு இடையேயும் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. பயங்கரவாதி தரப்பில் ஒருவன் கொல்லப்பட்டான். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Trending News