முகத்தில் செருப்பால் அடித்து... காலை நக்கவைத்து துன்புறுத்தல் - வைரலாகும் வீடியோவால் சர்ச்சை!

Madhya Pradesh Viral Video: ஓடும் காரில் ஒரு நபர் தனது உள்ளங்கால்களை வேறு ஒருநபரை நாக்கால் நக்கும்படி துன்புறுத்தியும், முகத்தில் செருப்பால் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 8, 2023, 09:43 PM IST
  • இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
  • இச்சம்பவம் குவாலியர் நகரில் நடந்துள்ளது.
  • வார்த்தைகளால் அந்த நபரை குற்றவாளி திட்டவும் செய்கிறார்.
முகத்தில் செருப்பால் அடித்து... காலை நக்கவைத்து துன்புறுத்தல் -  வைரலாகும் வீடியோவால் சர்ச்சை! title=

Madhya Pradesh Viral Video: மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவர், பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதேபோன்று அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. 

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் ஓடும் காரில் ஒருவர் மற்றொருவரின் உள்ளங்கால்களை நாக்கால் நக்குவதைக் காட்டும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாதிக்கப்பட்டவரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தப்ரா நகரில் வசிப்பவர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வைரலான வீடியோவில், பாதிக்கப்பட்டவரை மற்றொரு நபர் பலமுறை அறைவதை பார்க்கமுடிகிறது. மேலும், அவர் நகரும் வாகனத்தில் "கோலு குர்ஜார் பாப் ஹை" (கோலு குர்ஜார் தந்தை) என்று சொல்லும்படி கட்டாயப்படுத்துகிறார்.

வைரலாகும் வீடியோ

மேலும் படிக்க | ஒடிஷா ரயில் விபத்து... 3 ரயில்வே ஊழியர்களை கைது செய்தது CBI!

பாதிக்கப்பட்டவர் பின்னர் அந்த மனிதனின் உள்ளங்கால்களை நாக்கால் நக்குவதைக் காணலாம். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் பலமுறை அடிப்பதையும், அவரை வார்த்தைகளால் திட்டுவதையும் காணலாம். மற்றொரு வீடியோ கிளிப்பில், குற்றஞ்சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் பாதணிகளால் பலமுறை அடிப்பதைக் காணலாம்.

இந்த சம்பவம் குறித்து பேசிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். தப்ரா துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி (SDOP) விவேக் குமார் ஷர்மா கூறுகையில், "வெள்ளிக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது, இது வாகனத்தில் ஒரு நபரை தாக்கியது. அந்த வீடியோ தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் அடித்ததற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். 

இந்த வார தொடக்கத்தில், மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் ஒரு பழங்குடி இளைஞரின் மீது பாஜக நிர்வாகி ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தின் வீடியோ கடந்த செவ்வாய்க்கிழமை சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார். 

ஜூன் 30 அன்று, ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள வர்காடி கிராமத்தில் சில சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து படம் பிடித்ததாக சந்தேகத்தின் பேரில் இரண்டு தலித் ஆண்கள் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | மணிப்பூர் கலவரம் - போலீஸ் அதிகாரி,சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News