சார்க் மாநாடு விவகாரம்: இந்தியாவிற்கு இலங்கை ஆதரவு

Last Updated : Sep 30, 2016, 05:48 PM IST
சார்க் மாநாடு விவகாரம்: இந்தியாவிற்கு இலங்கை ஆதரவு title=

காஷ்மீரில் உள்ள  உரி ராணுவ முகாம் தாக்குதலை கண்டிக்கும் விதமாக பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் அறிவித்தன.

சார்க் அமைப்பில் உள்ள 8 நாடுகளில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளன. இதனால் சார்க் மாநாடு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் இவர்களை சமாதானப்படுத்தி சார்க் மாநாட்டை நடத்த, மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள நேபாளம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கையும் அறிவித்துள்ளது. மேலும் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், பாகிஸ்தானில் மாநாடு நடத்தும் சூழ்நிலை இல்லை எனவும் இலங்கை தெரிவித்துள்ளது.

சார்க் அமைப்பில் உள்ள 5 நாடுகள் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால், சார்க் மாநாடு நடக்குமா? இல்லையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News