பாலியல் பாலாத்காரத்தால் பாதிக்கபட்ட பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்!

கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர் மீது நான்கு மர்ம நபர்கள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Dec 8, 2019, 03:47 PM IST
பாலியல் பாலாத்காரத்தால் பாதிக்கபட்ட பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள்! title=

கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர் மீது நான்கு மர்ம நபர்கள் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றசம்பவம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கு எதிரான மற்றொரு குற்றச் சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் ஒரு பெண் மீது நான்கு ஆண்கள் ஆசிட் வீசியுள்ளனர். 

பாதிக்கபட்ட 30 வயதான பெண் 30 சதவீதம் தீக்காயங்களுக்கு உள்ளாகி மீரட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷாப்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த வட்ட அலுவலர் கிர்ஜா ஷங்கர் திரிபாதி கூறியதாவது: "புதன்கிழமை இரவு நான்கு ஆண்கள் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவர்கள் மீது ஆசிட் ஊற்றினர். நான்கு பேரும் தலைமறைவாக உள்ளனர், ஆனால் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று திரிபாதி கூறினார்.

முன்னதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்தப் பெண் காவல்துறையை அணுகுவதற்கு பதிலாக நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். பாலியல் பலாத்காரத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், வழக்கு மூடப்பட்டதாகவும் போலீசார் கூறினர். 

 

Trending News