பலாத்கார வழக்கு : மக்கள் அமைதி காக்க சாமியார் வேண்டுகோள் - வீடியோ

Last Updated : Aug 25, 2017, 09:42 AM IST
பலாத்கார வழக்கு : மக்கள் அமைதி காக்க சாமியார் வேண்டுகோள் - வீடியோ title=

குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஈடுபடாமல் மக்கள் அமைதி காக்க வேண்டும் என சாமியார் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.

நீதிமன்றம் தீர்ப்பு குர்மீத் ராம் ரஹிம் சிங் எதிராக இருந்தால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொபைல் இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், குர்மீத் ராம் ரஹிம் சிங் வீடியோ இன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் மக்கள் அமைதி காக்க வேண்டும். அனைவரும் சட்டம் மதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

வீடியோ:- 

Trending News