போரில் வீரமரணமடைபவர்களின் குடும்பங்களுக்கு 4-மடங்கு இழப்புத்தொகை வழங்க ஒப்புதல்!

யுத்தகளத்தில் வீரமரணமடைபவர்களின் வாரிசுகளுக்கான இழப்புத்தொகையை நான்கு மடங்காக உயர்த்திய ராஜ்நாத் சிங்!!

Last Updated : Oct 6, 2019, 07:50 AM IST
போரில் வீரமரணமடைபவர்களின் குடும்பங்களுக்கு 4-மடங்கு இழப்புத்தொகை வழங்க ஒப்புதல்! title=

யுத்தகளத்தில் வீரமரணமடைபவர்களின் வாரிசுகளுக்கான இழப்புத்தொகையை நான்கு மடங்காக உயர்த்திய ராஜ்நாத் சிங்!!

டெல்லி: ஒரு பெரிய நலன்புரி நடவடிக்கையைத் தொடங்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை அனைத்து வகையான போர் விபத்துக்களின் குடும்பங்கள் மற்றும் வீரர்களுக்கு ரூ .2 லட்சம் முதல் ரூ .8 லட்சம் வரை பண உதவி வழங்க ஒப்புதல் அளித்தார். இந்த தொகை இராணுவ போர் விபத்துக்கள் நல நிதியத்தின் (ABCWF) கீழ் வழங்கப்படும்.

யுத்தகளத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு வழங்கி வரும் இழப்புத்தொகையை, நான்கு மடங்காக உயர்த்தி வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்க, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார்.

யுத்தகளத்தில் வீரமரணம் அடையும் வீரர்கள் மற்றும் படுகாயம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு, மத்திய அரசு ரூ.2 லட்சம் இழப்புத்தொகையாக வழங்கி வந்த நிலையில், தற்போது, அந்த தொகையை நான்கு மடங்காக உயர்த்தி, ரூ.8 லட்சமாக வழங்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளதாக, இன்று (சனிக்கிழமை), மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், சியாச்சின் சிகரத்தில் 10 வீரர்கள் மரணமடைந்ததையடுத்து, யுத்தகளத்தில் வீரமரணம் அடையும் வீரர்களின் குடும்பத்தார்க்கு பண உதவி செய்ய பலரும் முன் வந்ததை தொடர்ந்து, மத்திய அரசு, ராணுவ போர் விபத்துக்கள் நல நிதியமைப்பை உருவாக்கியது. மேலும், வீரர்களின் குடும்பத்தார்க்கு உதவ நினைப்பவர்களுக்காக, சிண்டிகேட் வங்கியின், சௌத் ப்ளாக் கிளையில்,  90552010165915 என்ற வங்கி கணக்கையும் தொடங்கியது. இந்த நிதியமைப்பு, தர்மகாரியங்களை வரையறுக்கும் சட்டம், 1890 இன் கீழ் இயங்கப்படுகிறது.

மேலும், ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அமல்படுத்திய "பாரத் கீ வீர்" நிதியுதவியும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News