கற்பழிப்பு குற்றங்களைச் செய்பவர்களை அடித்து கொலை செய்ய வேண்டும்: ஜெயா பச்சன்

பாலியல் போன்ற கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களை பொதுவெளியில் வைத்து அடித்து கொலை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் கூறியுள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 2, 2019, 08:12 PM IST
கற்பழிப்பு குற்றங்களைச் செய்பவர்களை அடித்து கொலை செய்ய வேண்டும்: ஜெயா பச்சன் title=

புதுடெல்லி: இதுபோன்ற கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களை அவமதித்து அடித்து கொலை செய்ய வேண்டும் என்று ஜெயா பச்சன் கூறியுள்ளார். இன்று நாடாளுமன்ற அவைகள் " இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் களுடன் தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் மற்ற மூத்த தலைவர்களும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். 

ஹைதராபாத்தின் நிர்பயா வழக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் சமாஜ்வாடி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சனும் தெலுங்கானாவில் நடந்த இந்த சம்பவம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இது வெட்கக்கேடான விஷயம் மட்டுமல்ல, இது மிகவும் பயமுறுத்தக்கூடிய செயல் என்று அவர் கூறினார். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களை என்றென்றும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே தீர்வாக லிஞ்சிங் (Lynching) இருக்கும் என்று ஜெயா கூறினார். அதாவது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை மக்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களே தண்டனை வழங்கி விடுவார்கள் எனக் கூறினார்.

அதிமுக எம்.பி. விஜிலா சத்யநாத் தனது உரையின் போது, தனது நாடு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்று கூறினார். 

அவசர அடிப்படையில் சமூக சீர்திருத்தத்திற்கு" மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸின் அமீ யஜ்னிக் கோரினார்.

இதுபோன்ற கொடூரமான குற்றங்களைச் சமாளிக்க கடந்த காலங்களில் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், இதுபோன்ற கொடுமைச் செயல்களுக்கு எதிராக சமூக மக்கள் எழுந்திருக்க வேண்டிய நேரம் இது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

திரிணாமுல் உறுப்பினர் சாந்தனு சென், விரைவான நீதிமன்றங்களை நிறுவுவதற்கும் கடுமையான தண்டனை வழங்குவதற்கும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனையை விளம்பரப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்வதற்கு முன் இருமுறை சிந்திப்பார்கள் " என்றார். 

தலைவர் எம்.வெங்கையா நாயுடு, "ஹைதராபாத்தில் நடந்தது மனிதநேயத்தின் அனைத்து கொள்கைகளுக்கும் அவமரியாதை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார். இந்த கொடூரமான சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது என்று மேல் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News