பாக்., ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி!

ஜம்முவில் ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாக்.ராணுவம் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் பலி

Last Updated : Jan 13, 2018, 06:42 PM IST
பாக்., ராணுவம் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் பலி! title=

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் சுந்தர்பானி இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த யோகேஷ் முரளிதர் பதானே என்ற வீரர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த யோகேஷ் முரளிதர் பதானே மராட்டிய மாநிலம் காலனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.

 

 

Trending News