Omicron: வெளிநாட்டில் இருந்து வந்த 6 பேருக்கு தொற்று; ஒமிக்ரான் வகையா என பரிசோதனை!

கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு (Genome Sequencing) அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் மகாராஷ்டிரா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 1, 2021, 11:04 AM IST
Omicron: வெளிநாட்டில் இருந்து வந்த 6 பேருக்கு தொற்று; ஒமிக்ரான் வகையா என பரிசோதனை! title=

கொரோனா வைரஸ் புதிய மாறுபாடான ஓமைக்ரான், உலகம் முழுவதும் பீதியை கிளப்பியுள்ளது.  ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் மிக மோசமான விளைவுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. Omicron வகையில் எதிர்பாராத எண்ணிக்கையிலான ஸ்பைக் புரதங்களைக் உள்ளதால், தொற்று பரவும் அபாயம் மிக அதிகம் என்று WHO எச்சரித்துள்ளது.

ஒமிக்ரான் (Omicron) குறித்து உலக சுகாதார நிறுவனமும் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, கொரோனாவின் புதிய மாறுபாட்டிலிருந்து பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்கா மற்றும் அதிக ஆபத்துள்ள நாடுகள் என பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய 6 பேர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், ஒமைக்ரான் பரவல் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

ALSO READ | இந்தியாவில் நுழைந்ததா ஒமைக்ரான்; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!!

Omicron மாறுபாடு உறுதிப்படுத்தப்படவில்லை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 பேரில் புதிய வகை Omicron தொற்று இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்த மகாராஷ்டிரா சுகாதாரத் துறை கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு (Genome Sequencing) அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களது தொடர்பில் வந்தவர்களை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த COVID-19 ஒமிக்ரான் மாறுபாட்டின் முதல் தொற்று பாதிப்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில்,  இப்போது அது சுமார் 12 நாடுகளில் பரவியுள்ளது. எதிர்காலத்தில் கோவிட்-19 பாதிப்புகள், பல காரணிகளைப் பொறுத்து கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும்  WHO மேலும் கூறியது. கோவிட் தடுப்பூசி போடும் பணியை மேலும் விரைவுபடுத்துவது அவசியம் எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் நிலையில், கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமைக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News