நொய்டா: அமிட்டி பல்கலை விடுதியில் மாணவர் தற்கொலை!!

Last Updated : Nov 6, 2016, 11:58 AM IST
நொய்டா: அமிட்டி பல்கலை விடுதியில் மாணவர் தற்கொலை!! title=

 

நொய்டா: தெலுங்கானாவை சேர்த்த 21 வயது மாணவன் நொய்டா அமிட்டி பல்கலை விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். சாய் கிருஷ்ணா நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைகழத்தில் முதுநிலை டிப்ளமோ படித்து வந்தார். நொய்டா அமிடி விடுதி அறையில் சாய் கிருஷ்ணா தற்கொலை செய்துகொண்டார். 

இந்நிலையில் சில நாட்கள்ளுக்கு முன் சாய் கிருஷ்ணாவிடம் தொலைபேசியில் பேசிய அவரது தந்தை, படிப்பில் கவனம் செலுத்துமாறு திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் படிப்பு செலவுக்காக வாங்கிய கடனை அவர்தான் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

அப்பாவின் பேச்சால் மனமுடைந்த சாய் கிருஷ்ணா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது பெற்றோருக்கு தெலுங்கில் கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் தற்கொலை செய்வது எளிதல்ல என்று குறிப்பிட்டுள்ள சாய் கிருஷ்ணா, நீங்கள் எனக்காக நிறைய செய்துள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சாய்கிருஷ்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Trending News