நகைக்கு ஆசைப்பட்டு வீட்டு முதலாளியை கொலை செய்த வேலைகாரி...

நகைக்காக ஆசைப்பட்டு வீட்டு முதலாளியை தனது மகனை வைத்து கொலை செய்த வீட்டு வேலைக்காரி! 

Last Updated : Jan 29, 2019, 03:39 PM IST
நகைக்கு ஆசைப்பட்டு வீட்டு முதலாளியை கொலை செய்த வேலைகாரி...  title=

நகைக்காக ஆசைப்பட்டு வீட்டு முதலாளியை தனது மகனை வைத்து கொலை செய்த வீட்டு வேலைக்காரி! 

டெல்லி: தென்கிழக்கு டெல்லியை சேர்ந்த வீரேந்திரா குமார் (77) மற்றும் அவரது மனைவி சரளா (72) இருவரும் தங்களின் மகன் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் நிலையில், அடுக்கு மாடி குடியிருப்பில் தனியாக வசித்துவந்துள்ளனர். 

இந்நிலையில், வீரேந்திரா மற்றும் அவரது மனைவியை அவர்களது உறவினர்கள் தொலைபேசியில், தொடர்பு கொண்ட போது அவர்களின் மொபைல் போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால், வீரேந்திராவின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளனர். 

ஆனால், வீட்டின் கதவு பூட்டப்படிருந்த நிலையில், வீட்டின் உள்புறம் இருந்து, அழுகிய நாற்றம் வந்துள்ளது. உடனே உறவினர்கள், இது குறித்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்த போது, வீரேந்திரரா மற்றும் அவரது மனைவியின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. 

இதை தொடர்ந்து, காவல் துறையினர் இந்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், டில்லியை சேர்ந்த சிறுவன் ஒருவனை கைது செய்த்துள்ளனர். ஆரம்பத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த அவன், போலீசாரின் கிடுபிடியால் தவறை ஒப்புக் கொண்டான். 

அவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவனின் தாயும் கைது செய்யப்பட்டார்.  ‛‛வீரேந்தரின் வீட்டில் சில ஆண்டுகளாக பகுதி நேரமாக பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்தேன். ஜன., 18-ல், வீரேந்தர், தன் வீட்டு பீரோவில், கட்டுக்கட்டாக பணமும், பல சவரன் நகைகளையும் வைத்ததை பார்த்தேன். பின்னர், என் மகனையும் என்னுடன் வீட்டு வேலைக்கு அழைத்து சென்றேன்.  வழக்கம் போல், வேலை முடிந்து, நான் மட்டும் அங்கிருந்து திரும்பிவிட்டேன். அங்குள்ள ஒரு பீரோவின் பின், என் மகன் ஒழிந்திருந்தான். 

சிறிது நேரம் கழித்து, வீரேந்தரின் மனைவி சரளாவிடம், பீரோ சாவி கேட்டு மிரட்டினான். தன்னிடம் சாவி இல்லை என்றும், கணவரிடம் தான் இருப்பதாகவும் கூறியதால், சரளாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தான். பின், வீட்டை உட்புறமாக பூட்டிவிட்டு வீரேந்தரின் வருகைக்காக காத்திருந்தான்.

அவர், காலிங் பெல் அடித்து பார்த்து, யாரும் திறக்காததால், தன்னிடம் இருந்த சாவியால் வீட்டை திறந்து உள்ளே நுழைந்தார். அங்கு தன் மனைவி சடலமாக கிடந்ததை பார்த்து கதறினார். அப்போது, பீரோவின் பின் ஒழிந்திருந்த என் மகன், உடனே, வீரேந்தராவிடம் பீரோ சாவி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தான். அவரும் பயந்து போய் பீரோ சாவியை கொடுத்தார்.

அங்கிருந்த பணம், நகைகளை கொள்ளையடித்த பின், வீரேந்தராவின் கழுத்து நரம்பை மட்டும் அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பிவிட்டான். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு சென்றான். சிறுது சிறுதாக ரத்தம் கசிந்து, மயக்க நிலையை அடைந்த , வீரேந்தரா அப்படியே இறந்திருக்கலாம்’’ என, அந்த பெண் கூறினார். 

சினிமா பாணியில், 18 வயது கூட நிரம்பாத மகனுக்கு கொலை செய்வது குறித்து பாடம் நடத்தி, மாஸ்டர் பிளான் போட்டு, கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய வேலைக்காரியையும், அவரது மைனர் மகனையும் போலீசார் கைது செய்தனர்.  

 

Trending News