மூதாட்டியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

மத்தியபிரதேசத்தில் 62-வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 20, 2018, 02:23 PM IST
மூதாட்டியை வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை! title=

மொரினா: மத்தியபிரதேசத்தில் 62-வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் அம்பாஹா பகுதியை சேர்ந்தவர் சந்திரப்பால்(35). இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு அவரின் குடியிறுப்பு பகுதிக்கு அருகில் இருந்த கஜூரி பகுதி சாலையில் வசித்து வந்த 62 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தினை வெளியே கூறினால் மூதாட்டியை கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இவரின் மீதான விசாரணையினை அம்பாஹா நீதிமன்றம் இன்று எடுத்துக்கொண்டது. நீதிபதி தர்மோந்திரா தாடா இந்த வழக்கின் தீர்ப்பினை வாசித்தார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சந்திரப்பாலுக்கு IPC 376-ன் படி ஆயுள் தண்டனை விதித்துள்ளார். நெடுநாட்களா நடைப்பெற்று வந்த வழக்கில் தற்போது வெளியாகியுள்ள முடிவு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Trending News