மோடிக்கு ராக்கி கட்டி வரும் பாகிஸ்தானிய பெண்!

Last Updated : Aug 7, 2017, 09:19 AM IST
மோடிக்கு ராக்கி கட்டி வரும் பாகிஸ்தானிய பெண்! title=

பாகிஸ்தானைச் சேர்ந்த ஷைக் என்ற பெண்மணி, திருமணத்திற்கு பின் இந்தியாவில் குடியேறியுள்ளார். அவர் முதன் முதலாக மோடிக்கு, ஆர்.எஸ்.எஸ் ஊழியராக இருந்த போது ராக்கி கட்டியுள்ளார். அதன் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு ராக்கி கட்டி வந்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

மோடியின் கடின உழைப்பும், தொலைநோக்கு பார்வையும் தான் பிரதமராக உயர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு பிரதமர் மோடி மிகவும் வேலைப் பளுவில் இருப்பதாக தகவல் கிடைத்ததாக சோகத்துடன் தெரிவித்தார். ஆனால் 2 நாட்களுக்கு முன், பிரதமரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.

இதையடுத்து அவர் ராக்கி செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது 23-வது ஆண்டாக மோடிக்கு ராக்கி கட்டுவதில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது.

இவ்வாறு ஷைக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News