செய்தியாளரை தாக்கிய பீகார் துணை முதல்-மந்திரியின் பாதுகாவலர்கள் - வீடியோ

Last Updated : Jul 12, 2017, 04:59 PM IST
செய்தியாளரை தாக்கிய பீகார் துணை முதல்-மந்திரியின் பாதுகாவலர்கள் - வீடியோ title=

ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளது. இந்த லிஸ்டில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம் பெற்று உள்ளது.

இதனால் எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பத்திரிக்கையாளரை சந்திப்பின் போது, பீகார் துணை முதல்-மந்திரி தேஜாஸ்வியின் பாதுகாப்பு அதிகாரிகள் செய்தியாளர் ஒருவரை தாக்கி உள்ளனர். அந்த வீடியோவை பார்க்கவும்.

வீடியோ:-

 

 

Trending News