14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்தது தீப்பெட்டி விலை: காரணம் விலைவாசி

இதற்கு முன்னர், 2007 ல் தீப்பெட்டியின் விலை, ஒரு பெட்டிக்கு 50 பைசாவில் இருந்து ரூ .1 ஆக உயர்த்தப்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2021, 07:14 PM IST
  • தீப்பெட்டியின் விலை உயர உள்ளது.
  • விலையை ரூ. 2 ஆக உயர்த்துவதற்கான முடிவை அனைத்து தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களும் சேர்ந்து எடுத்துள்ளன.
  • தீப்பெட்டி தயாரிக்க 14 வகையான மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன.
14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்தது தீப்பெட்டி விலை: காரணம் விலைவாசி   title=

புதுடெல்லி: 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தீப்பெட்டியின் விலை உயர உள்ளது. பணவீக்கம் அதிகரித்து வருவதால், மூலப்பொருட்களின் விலை உயர்வதே இதற்கு காரணம். வரவிருக்கும் இந்த விலை திருத்தத்திற்குப் பிறகு, தீப்பெட்டிகளின் சில்லறை விலை, டிசம்பர் 1, 2021 முதல் தற்போதைய விலையான 1 ரூபாயில் இருந்து 2 ரூபாயாக இரட்டிப்பாகும்.

இதற்கு முன்னர், 2007 ல் தீப்பெட்டியின் விலை, ஒரு பெட்டிக்கு 50 பைசாவில் இருந்து ரூ .1 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இந்த விலையை ரூ. 2 ஆக உயர்த்துவதற்கான முடிவை அனைத்து தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களும் சேர்ந்து எடுத்துள்ளன. 

14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டிகளின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய தீப்பெட்டிகள் சம்மேளனம் (All India Chamber of Matches ) அறிவித்துள்ளது. அதிகரிக்கும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கூற்றுப்படி, தீப்பெட்டி தயாரிக்க 14 வகையான மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன. கடந்த 14 ஆண்டுகளில் இவற்றில் பல பொருட்களின் விலைகள் இருமடங்கு அதிகமாகி, தீப்பெட்டி உற்பத்தியின் செலவுகள் (Price Rise) அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

ALSO READ: சமைப்பதா வேண்டாமா? ஒரு கொத்து கொத்தமல்லி ரூ.100, திகிலூட்டும் தக்காளி, வெங்காயம்!!

உதாரணமாக, சிவப்பு பாஸ்பரஸ் விலை ரூ.425-ல் இருந்து ரூ.810 ஆகவும், மெழுகு விலை ரூ.58-ல் இருந்து ரூ.80 ஆகவும் அதிகரித்துள்ளது. வெளிப்புற பெட்டி பலகையின் விலை ரூ.36-ல் இருந்து ரூ.55 ஆகவும், உள் பெட்டி பலகையின் விலை 32-ல் இருந்து ரூ.58 ஆகவும் அதிகரித்துள்ளன. 

தீப்பெட்டி தயாரிக்கத் தேவையான காகிதம் (Paper), ஸ்பிளிண்ட், பொட்டாசியம் குளோரேட் மற்றும் கந்தகம் போன்ற மற்ற பொருட்களின் விலைகள் அக்டோபர் 2021 இல் அதிகரித்தன.

ALSO READ: 7th Pay Commission பம்பர் செய்தி: மீண்டும் உயர்ந்தது அகவிலைப்படி, ஒப்புதல் அளித்தது அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News