J&K: தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் மூன்று பேர் சிக்கினர்!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் மூன்று பேர், பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர்.

Last Updated : Mar 1, 2019, 08:43 AM IST
J&K: தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் மூன்று பேர் சிக்கினர்! title=

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதிகள் மூன்று பேர், பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாலக்கோட் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள  தீவிரவாதிகளின முகாம்கள் மீது இந்திய விமானப்படை கடந்த 26 ஆம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது.
 
அதைத்தொடர்ந்து இந்திய - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குப்வாரா மாவட்டத்துட்குட்ட ஹண்ட்வாரா பகுதியில் இன்று  அதிகாலை நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்புப் படையினருக்கும்,  தீவிரவாதிகளுக்கும் இடையை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், மூன்று தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கினர். தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

 

Trending News