கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் இன்றுடன் ஓய்வு

Last Updated : Jun 12, 2017, 11:06 AM IST
கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் இன்றுடன் ஓய்வு title=

சுப்ரீம் கோர்ட்டால் தண்டனை அறிவிக்கப்பட்டு தலைமறைவாக இருந்துவரும் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவு பெறுகிறது.

‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கில் தண்டனைபெற்று தலைமறைவாக உள்ளவர் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா ஐ கோர்ட் நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார். 

சில மாதங்களுக்கு முன்னர், தன் சக் நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி, சுப்ரீம் கோர்ட்டின் தன்னார்வ விசாரணையில் நீதிபதி கர்ணன் மீது குற்றச்சாட்டுகள் பல சுமத்தப்பட்டன.

இதையொட்டி, ஐகோர்ட் நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். இந்நிலையில் நீதிபதி கர்ணனின் பதவிக்காலம் இன்றோடு நிறைவுறுகிறது.

Trending News