BJP அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்க காங்கிரஸ்க்கு JD(S) ஆதரவு: தேவ கவுடா!

அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவிப்பு!!

Last Updated : May 18, 2019, 01:51 PM IST
BJP அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்க காங்கிரஸ்க்கு JD(S) ஆதரவு: தேவ கவுடா!  title=

அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவிப்பு!!

மக்களவைக்கு 7 கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. கடைசி கட்டத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகளில் ஞாயிற்றுகிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்டில் 3 தொகுதிகள், இமாச்சல் பிரதேசத்தில் 4, சண்டிகர் தொகுதி என 59 தொகுதிகளுக்கும் நாளை (19 ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடைசி கட்ட மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் அனிவரும் தற்போது இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார். 

இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் பிரதமர் தேவே கவுடா திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் காங்கிரஸ் உடன் தான் இருக்கிறோம். நான் எதையும் இது குறித்து பேச விரும்பவில்லை. 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும். அப்போது தெளிவான படம் நாட்டிற்கு தெரியவரும் என்றார்.

UPA தலைவர் சோனியா காந்தி மே 23 ஆம் அல்லாத தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் ஒரு கூட்டத்தை சந்தித்ததாக செய்தி வெளியிட்டதில், கௌடா, சோனியா காந்தி எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்று கூறிவிட்டார், ஆனால் கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியாக இருப்பார். கூட்டத்தை அழைப்பதன் மூலம், சோனியா கணணி தனது "அரசியல் முதிர்ச்சியை" காட்டுகிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியுடன் முன்னாள் பிரதமர் தேவ கவுடா மகன் குமாராசாமி முதல்வராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News