ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் ரூ.21 ஆயிரம் கோடி டெபாசிட்

ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் இதுவரை 21000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு பின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகா மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மக்களின்  ஜன்தன் வங்கி கணக்கில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜன் தன் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தினால், சலுகைகள் பறிபோகும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Last Updated : Nov 24, 2016, 08:20 AM IST
ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் ரூ.21 ஆயிரம் கோடி டெபாசிட் title=

புதுடெல்லி: ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் இதுவரை 21000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நவம்பர் 8-ம் தேதிக்கு பின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. கர்நாடகா மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மக்களின்  ஜன்தன் வங்கி கணக்கில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஜன் தன் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தினால், சலுகைகள் பறிபோகும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரதமர் மோடி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்களுக்கான பணம், வரவு வைக்கப்படும் என பேசப்பட்டது. ஜன்தன் திட்டத்தில் இணைந்துள்ள வங்கி கணக்கு வைத்திருப்போர் ரூ.50,000க்கு மேல் வரவு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும்  21000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 8-ம் தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மடிய அரசு கூறி இருந்தது. மேலும் இந்த திட்டதின் மூலம் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் மாற்றுவதாக கூறப்படுகிறது. 

இதனால், ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் இதுவரை 21000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, ஜன்தன் வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு, அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1.50 லட்சம் செலுத்தும் என்ற தகவல் பரவி வருகிறது. அது போன்ற திட்டங்கள் வந்தால், இவர்கள் பாதிக்கப்படலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Trending News