ஜம்மு-காஷ்மீரின் ஷர்கர் காடுகளில் துப்பாக்கிச்சூடு- ஆயுதங்கள் மீட்பு!

ஜம்மு-காஷ்மீரின் ஷர்கர் காடுகளில் இராணுவப் படையினரால் நடத்தபட்ட துப்பாக்கிச்சூட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டனர்.

Last Updated : Dec 27, 2017, 11:01 AM IST
ஜம்மு-காஷ்மீரின் ஷர்கர் காடுகளில் துப்பாக்கிச்சூடு- ஆயுதங்கள் மீட்பு! title=

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, இராணுவப் படையினரால் தீவிரமான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்தக் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஷர்கர் காடுகளில் இன்று,  60 ஆர்.ஆர்.ஆர் இராணுவப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்கு தீவிரவாதிகள் இருப்பது தெரியவந்தது. அதனால்,  இராணுவப் படையினர் அதிரடியாகக் களத்தில் இறங்கினர். 

அப்போது நடந்த தாக்குதலில், தீவிரவாத அமைப்பை சேர்ந்த சில தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில்,இராணுவப் படையினருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளயப்பட்டு வருகின்றது.

Trending News