கொரோனா வைரஸ் பயம்...அலுவலகத்தை காலி செய்த Infosys நிறுவனம்!

பெங்களூரில் உள்ள Infosys நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்த நிலையில், அந்த அலுவலகத்தை Infosys நிறுவனம் உடனடியாக காலி செய்துள்ளது. 

Last Updated : Mar 14, 2020, 12:17 PM IST
கொரோனா வைரஸ் பயம்...அலுவலகத்தை காலி செய்த Infosys நிறுவனம்! title=

பெங்களூரில் உள்ள Infosys நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரியவந்த நிலையில், அந்த அலுவலகத்தை Infosys நிறுவனம் உடனடியாக காலி செய்துள்ளது. 

இதுதொடர்பாக Infosys நிறுவனத்தின் பெங்களூரு மேம்பாட்டு மையத் தலைவர் குருராஜ் தேஷ்பாண்டே மின்னஞ்சல் வழியாக அளித்துள்ள தகவலில், 

ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக IIPM கட்டிடத்திலிருந்து மட்டும் நாங்கள் வெளியேறுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இன்போசிஸ் நிறுவனம் பெங்களூரில் மட்டும் பல வளாகங்களைக் கொண்டுள்ளது. 1990 களிலிருந்து செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம். 

இது எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்க, எங்கள் பாதுகாப்பிற்கான இடத்தை நாங்கள் சுத்தப்படுத்துவோம்" என்றும் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். 

தேஷ்பாண்டே தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கையாகவும் சிறப்பாக தயாராகவும் இருப்பதை உறுதிப்படுத்த அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

எந்தவொரு சமூக ஊடக சேனல்களிலும் செவிமடுக்கும் / வதந்திகளான எந்தவொரு தகவலையும் நம்புவதோ அல்லது பரப்புவதோ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல் தொழில்நுட்ப பெங்களூரு மேம்பாட்டு மையத் தலைவர் கூறினார்.

Trending News