COVID-19 Update: 24 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானோர் பாதிப்பு!!

உலக அளவீட்டின்படி, கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 1 லட்சம் 53 ஆயிரம் 485 பேர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3129 பேர் உயிர் இழந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி 80 லட்சம் 46 ஆயிரம் 957 ஆக உயர்ந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 31, 2021, 09:33 AM IST
  • கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 1.53 லட்சமாக பதிவாகியுள்ளது.
  • சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
  • கொரோனாவால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
COVID-19 Update: 24 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானோர் பாதிப்பு!! title=

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வந்த நிலையில், தற்போது இதன் வீரியம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. 

ஒரு நாள் தொற்றின் அளவு வீழ்ச்சியைக் கண்டு வருகிறது. இதனுடன் இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவது நல்ல விஷயமாகும். கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 1.53 லட்சமாக பதிவாகியுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் 3129 நோயாளிகள் இறந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (மே 30) அன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 24 மணி நேரத்தில் 1.65. லட்சம் புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர், 3460 நோயாளிகள் இறந்தனர்.

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 1,53,485 பேர் புதிதாக பாதிப்பு

உலக அளவீட்டின்படி, கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 1 லட்சம் 53 ஆயிரம் 485 பேர் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3129 பேர் உயிர் இழந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்றால் (Coronavirus) மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி 80 லட்சம் 46 ஆயிரம் 957 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு 3,29,127 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சிகிச்சையில் இருக்கும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 20 லட்சத்திற்கு அருகில் உள்ளது

தரவுகளின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2.3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்துள்ளனர். அதன் பிறகு கோவிட் -19 (COVID-19) இலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,56,84,529 ஆக அதிகரித்துள்ளது. இதனுடன், நாட்டில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நாடு முழுவதும் 20 லட்சம் 33 ஆயிரம் 301 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ALSO READ: நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமல்: வாகனங்களில் வரும் மளிகைப் பொருட்கள்

கொரோனா வைரஸ் மீட்பு விகிதம் 90 சதவீதத்திற்கு மேல்

இன்று, நாட்டில் தொடர்ச்சியாக 18 வது நாளாக, ஒரு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை விட மீட்பு எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இதன் மூலம், கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து மீள்பவர்களின் மீட்பு விகிதம் 90 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.16 சதவீதமாக உள்ளது. 

இதன் மூலம், சிகிச்சையில் இருப்பவர்களின் (Active Cases) எண்ணிக்கை 8 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையின் அடிப்படையிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் உலகளவில் அமெரிக்காவிலும் பிரேசிலிலும் அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

ALSO READ: கொரோனா வைரஸ்; சீனாவிற்கு எதிராக சிக்கிய ஆதாரம்; மர்ம திரை விலகுமா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News