நாடு முழுவதும் ஒரே சட்டம் : மத்திய அரசு திட்டம்

Last Updated : Jul 1, 2016, 05:45 PM IST
நாடு முழுவதும் ஒரே சட்டம் : மத்திய அரசு திட்டம் title=

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, மத்திய சட்டதுறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள சாதக மற்றும் பாதகங்களை யுசிசி ஆய்வு செய்து வருகிறது. நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையிலான  சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை அளிக்க மத்திய சட்ட குழுவிற்கும் அரசு கடிதம் எழுதி உள்ளது. 

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வரப்படும் என்பது பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News