UP Horror: குழந்தை ஆணா பெண்ணா என அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த கணவன்!!

நம்மை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் நாம் மனிதர்களுக்கு இடையில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை கிளப்பி விடுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2020, 08:24 PM IST
  • ஐந்து மகள்களின் தந்தை ஒருவர், சனிக்கிழமை மாலை தனது கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்ததாகக் கூறப்படுகிறது.
  • கர்ப்பமாய் இருந்த தன் மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்துகொள்ள இதை செய்தார்.
  • அந்தப் பெண் ஏழு மாத கர்ப்பிணி என்று கூறப்படுகிறது.
UP Horror: குழந்தை ஆணா பெண்ணா என அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த கணவன்!! title=

படான்: நம்மை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் நாம் மனிதர்களுக்கு இடையில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை கிளப்பி விடுகின்றன.

உத்தரபிரதேசத்தில் (Uttar Pradesh) நடந்த ஒரு பயங்கரமான சம்பவத்தில், ஐந்து மகள்களின் தந்தை ஒருவர், சனிக்கிழமை மாலை தனது கர்ப்பிணி மனைவியின் (Pregnant Wife) வயிற்றைக் கிழித்ததாகக் கூறப்படுகிறது.

43 வயதான பன்னாலால் என்ற தொழிலாளி, வீடு திரும்பியபோது அவர் தனது சுய நினைவில் இல்லை. அதோடு, அவர் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர், கர்ப்பமாய் இருந்த தன் மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை ஆணா பெண்ணா (Baby’s Gender) என்பதை தெரிந்து கொள்ள, அவர் ஒரு கூர்மையான முனை கொண்ட ஆயுதத்தால் மனைவியின் வயிற்றை கிழித்தார்.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய எஸ்.பி. (சிட்டி) பிரவீன் சிங் சவுகான் பி.டி.ஐ-யிடம், சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெக்பூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.

கணவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி., குற்றத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கூறினார்.

ALSO READ: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தலையை துண்டாக வெட்டி எறிந்த கொடூரம்!!

அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன், அவர் ஆபத்தான நிலையில் பரேலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பன்னாலால், தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தார். மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்ள அவர் இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை செய்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

காவல்துறையின் (UP Police) கூற்றுபடி, அப்பெண்ணின் கணவரான பன்னாலால், வீடு திரும்பியவுடன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரது மனைவி அனிதா தேவியை (40) கருக்கலைப்பு செய்யும்படி கட்டாயப்படுத்தினார்.

அனிதா மறுத்தபோது, ​​பன்னலால், குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிய அடிவயிற்றில் அரிவாளால் தாக்கினார். அந்தப் பெண் ஏழு மாத கர்ப்பிணி என்று கூறப்படுகிறது.

ALSO READ: கோயம்பத்தூரில் கொடூரம்! 7 வயது பேத்தியை தொடர்ந்து கற்பழித்த 65 வயது முதியவர்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News