யானை கூட்டத்தில் சிக்கி வனதுறை அதிகாரி பரிதாப மரணம்!

மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியில் யானை மிதித்து 46 வயது ஆண் பரிதாபமாக உயிர் இழந்தார்!

Last Updated : Jan 30, 2018, 11:57 PM IST
யானை கூட்டத்தில் சிக்கி வனதுறை அதிகாரி பரிதாப மரணம்! title=

ஜார்கிராம்: மேற்குவங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியில் யானை மிதித்து 46 வயது ஆண் பரிதாபமாக உயிர் இழந்தார்!

ஜார்கிராம் பகுதியின் நாராயன்பூர் காவல்துறை சராங்கத்திற்கு உட்பட்ட ஸ்ரீராமபுர கிராமத்தில் தான் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. 

வனப்பகுதியில் இருந்து தவறி கிராமபகுதியில் நுழைந்த யானைகளை மீண்டும் காட்டிற்கு விரட்ட வனதுறையினர் முயற்சிக்கையில், இந்த சம்பத்தின் போது யானை தவறுதலாக அருகாமையில் இருந்த வீட்டினில் நுழைந்துள்ளது, அப்போது வீட்டில் இருந்த நபரினை யானை மிதித்ததில் அவர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் பெயர் பிஜாய் ஹெம்பரம் என தெரியவந்துள்ளது. மேலும் இவர் அக்காட்டுப் பகுதி பாதுகாப்பு படையை சேர்ந்தவர் எனவும் வனத்துறையினர் தெரிவத்துள்ளனர்.

சுமார் 15-லிருந்து 20 யானைகள் கொண்ட குழுவினை வனத்துறையினர் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். 

யானையிடம் மிதிப்பட்ட பிஜாய் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனினும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்!

Trending News