கொரோனா முழு அடைப்பு காலத்தில் மட்டுமே பேருந்து கட்டண உயர்வு செல்லுபடியாகும்...

சமூக தொலைதூர விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சேவைகளை இயக்கும்போது பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய பஸ் கட்டணத்தை அதிகரிக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. 

Last Updated : May 13, 2020, 06:34 PM IST
கொரோனா முழு அடைப்பு காலத்தில் மட்டுமே பேருந்து கட்டண உயர்வு செல்லுபடியாகும்... title=

சமூக தொலைதூர விதிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் சேவைகளை இயக்கும்போது பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய பஸ் கட்டணத்தை அதிகரிக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. 

கட்டண உயர்வு குறித்த விவரங்கள் விரைவில் அரசாங்க உத்தரவு மூலம் அறிவிக்கப்படும் என்றும், COVID-19 காலகட்டத்தில் மட்டுமே இந்த உயர்வு பொருந்தும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக தூரத்தை உறுதிப்படுத்த, 38 இருக்கைகள் கொண்ட நகர சேவை பேருந்தில் வெறும் 19 பேரை மட்டுமே கொண்டு செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இரண்டு இருக்கைகளில் ஒருவரும், மூன்று இருக்கைகளில் இரண்டு நபர்களும் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகள் யாரும் பேருந்தில் நின்று பயணிக்க அனுமதி இல்லை. 

இதன் காரணமாக சுமார் 12,000 பேருந்துகளின் உரிமையாளர்கள் சமூக தூரத்தை வைத்திருக்கும்போது இயங்குவது சாத்தியமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் மக்கள் வசதியாக உணரத் தொடங்குவதற்கு குறைந்தது நான்கு மாதங்கள் ஆகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த காலக்கட்டத்தில் நஷ்டம் இன்றி பேருந்துகளை இயக்க பேருந்து கட்டண உயர்வு அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“முழு அடைப்பிற்கு பிறகு நாங்கள் 20 பேரைக் கூட பெறப்போவதில்லை. பொது போக்குவரத்தின் மகிமையை மீண்டும் பெற சிறிது நேரம் ஆகும்” என்று கேரள மாநில தனியார் பஸ் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பின் (KSPBOF) பொதுச் செயலாளர் லாரன்ஸ் பாபு கூறுகிறார்.

இதற்கிடையில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு காலாண்டு வரி சராசரியாக ரூ.27,000 செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயங்காததால் பஸ் உரிமையாளர்களும் கடந்த 30 நாட்களாக விலக்கு பெற தகுதியுடையவர்கள் என அரசு தெரிவித்துள்ளது. KSRTC-யின் சாலை வரியை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. எனினும், KSPBOF வரி தளர்வு மற்றும் பராமரிப்புக்கு வட்டி இல்லாத கடன்கள் வடிவில் கூடுதல் ஆதரவைக் கோருகிறது. 

Trending News