ஜார்க்கண்டில் காங்கிரஸ்க்கு பின்னடைவு; காங்., கட்சி முக்கிய புள்ளி AAP-யில் இணைவு..

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்!!

Last Updated : Sep 19, 2019, 12:28 PM IST
ஜார்க்கண்டில் காங்கிரஸ்க்கு பின்னடைவு; காங்., கட்சி முக்கிய புள்ளி AAP-யில் இணைவு.. title=

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்!!

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரசுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவில், அதன் வலிமைமிக்கவர் அஜோய் குமார் வியாழக்கிழமை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் (AAP) இணைந்தார். ஜார்க்கண்ட் கட்சியின் தலைவராக இருந்த அஜோய் குமார், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னதாகவே கப்பல்களைத் தாண்டினார். 

பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததால், அந்த கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள், தோல்விக்குப் பொறுப்பேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்களில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அஜோய் குமாரும் ஒருவர்.

இந்நிலையில், இன்று டெல்லி வந்த அஜோய் குமார், துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சந்தித்து அவரது முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அவரை மணிஷ் சிசோடியா மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜோய் குமார் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News