டெல்லியில் விவசாயிகளை சந்தித்த திமுக மு.க.ஸ்டாலின்

Last Updated : Apr 1, 2017, 11:09 AM IST
டெல்லியில் விவசாயிகளை சந்தித்த திமுக மு.க.ஸ்டாலின் title=

டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 19 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பிற மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், திமு.க., எம்.பி., கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். \

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அவருடன் எம்.பி.,க்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா உள்ளிட்டோர் சென்றனர்.

தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயிகள் பிரச்சனையை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கேட்டேன். ஆனால் நேரம் ஒதுக்கவில்லை.

Trending News