பலத்த மழை காரணமாக ஆக., 11 வரை விமான சேவைகள் ரத்து!

கேரளாவில் தீவிரமடைந்து வரும் பருவமழை காரணமாக விமான சேவைகள் வரும் ஆகஸ்ட் 11, வரை நிறுத்திவைக்கப்படுகிறது!

Last Updated : Aug 9, 2019, 08:38 AM IST
பலத்த மழை காரணமாக ஆக., 11 வரை விமான சேவைகள் ரத்து! title=

கேரளாவில் தீவிரமடைந்து வரும் பருவமழை காரணமாக விமான சேவைகள் வரும் ஆகஸ்ட் 11, வரை நிறுத்திவைக்கப்படுகிறது!

கேரளாவில் கடந்த சில தினங்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாடைந்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்பரப்பு மோசமாக இருக்கும் எனவும் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளையில் திருசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர் மற்றும் காசர்கோட் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கேரளாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழையின் மத்தியில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பேரழிவை ஏற்படுத்தி வரும் தென்மேற்கு பருவமழையின் இரண்டாவது சுற்றுக்கு கேரளா தற்போது பலியாடாக மாறியுள்ளது என்பது இதன் மூலம் தெரிகிறது.

இதற்கிடையில் முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை இரவு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் மாநிலத்தில் வெள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்தார். இதுவரை 22,165 பேர் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 315 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என முதல்வர் பினராயி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் மகாராஷ்டிராவிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மகாராஷ்டிராவின் மூன்று மாவட்டங்களான கோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சாலையை ஆக்ரமித்துள்ள வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதித்துள்ளது.

Trending News