இந்தியாவை சீண்டும் சீனா!! இந்திய எல்லைக்குள் நுழைந்து தேசியக்கொடியை நட்ட சீனா

மீண்டும் இந்தியாவை சீண்டும் சீனா. ஜம்மு-காஷ்மீரின் லே-லடாக்கிற்க்கு அருகில் உள்ள டெம்சோக்கிற்கு சீனா படைகள் இருந்தது தெரியவந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 12, 2019, 08:37 PM IST
இந்தியாவை சீண்டும் சீனா!! இந்திய எல்லைக்குள் நுழைந்து தேசியக்கொடியை நட்ட சீனா title=

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள டோக்லாம் விவகாரத்தில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை சுமுகமாக முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், சீனத் துருப்புக்கள் தங்கள் தேசியக் கொடியை லேக்-கில் நடும் படங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, இந்தோ-சீனா எல்லையில் மீண்டும் பதற்ற நிலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்திய சீன எல்லைக்கோடு அருகில் உள்ள டெம்சோக் பகுதி இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு இந்திய எல்லைக்குள் உள்ள எல்.ஏ.சி.யில் சீனாவின் துருப்புக்கள் காணப்பட்டுள்ளன. அவர்களின் எண் 11 சொல்லப்படுகிறது. இந்த வீரர்கள் சுமார் 40 நிமிடங்கள் எல்லைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த வீரர்கள் இராணுவ சீருடையில் இல்லை. அவர்கள் வேறு ஆடைகளை அணிந்திருந்தார்கள். ஆனால் அவர்களின் கையில் பதாகைகளையும் சீனக் கொடிகளையும் இருந்தன.

சீனா வீரர்கள் வைத்திருந்த பதாகையில் திபெத்தில் பிரிவை நிறுத்துங்கள் என எழுதியிருந்தது. இந்த சம்பவங்கள் ஜூலை 6 ஆம் தேதி நடந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லடாக் உட்பட இமயமலைப் பகுதியில் ஏராளமான தலாய்லாமாவுக்கு ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளனர். திபெத்தியர்கள் தங்கள் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது, சீனா வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. சீனா தலாய்லாமாவை தனது எதிரியாக கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு நீண்ட எல்லைக் கோடு உள்ளது. இந்த எல்லைக் கோடுகள் தெளிவாகப் பிரிக்கப்படவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சர்ச்சை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

Trending News