CAA-க்கு எதிராக தீர்மானம் கொண்டு வர தெலுங்கானா அரசு முடிவு!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Last Updated : Jan 26, 2020, 03:00 PM IST
CAA-க்கு எதிராக தீர்மானம் கொண்டு வர தெலுங்கானா அரசு முடிவு! title=

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ராவ் இதுகுறித்து தெரிவிக்கையில்., ''நாங்கள் இந்தச் சட்டத்தை பகிரங்கமாக எதிர்கிறோம்., எதிர்காலத்தில் நாங்கள் CAA, தேசிய மக்கள் தொகை பதிவு (NPR) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (NRC) ஆகியவற்றுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வரலாம்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் விரைவில் ஹைதராபாத்தில் அமைச்சர்கள் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் இதுதொடர்பாக ஒரு சந்திப்பை நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பிரச்சாரத்தை வழிநடத்த மற்ற கட்சிகளுடன் கைகோர்க்கப்படுவதையும் KCR மேலும் சுட்டிக்காட்டியதுடன், புதிதாக அமைக்கப்பட்ட சட்டத்தை நீக்குமாறு உச்சநீதிமன்றத்தில் முறையிடும் தயாராகியுள்ளார்.

மதச்சார்பின்மை குறித்து சமரசம் செய்ய தனது கட்சிக்கு எந்த கேள்வியும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள தெலங்கானா முதல்வர்., "இந்தியாவை இந்து தேசமாக மாற்ற முடியாது. நாங்கள் ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த நாடு எல்லா மக்களுக்கும் சொந்தமானது. நாங்கள் தொடர்ந்து மதச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும்," என்று மேலும் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை, தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) நகராட்சித் தேர்தலை வென்றது, 120 நகராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட மற்றும் ஒன்பது நகராட்சி தொகுதிகளில் ஏழு அதிகாரங்களை கைப்பற்றியது. சந்திரசேகர ராவ் கட்சி 1557 இடங்களை வென்று பெரும்பான்மையைப் பெற்றது. 

பாரிய ஆணையை வழங்கிய மக்களுக்கு சந்திரசேகர ராவ் நன்றி தெரிவித்ததோடு, டிசம்பர் 2018 சட்டமன்றத் தேர்தலில் தொடங்கி தொடர்ந்து மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதால் வெற்றி சாதாரணமானது அல்ல என்றும் தெரிவித்தார்.

Trending News