பெட்ரோல், டீசல் விலையில் ₹2.50 குறைக்க மத்திய அரசு முடிவு!

பெட்ரோல், டீசல் விலையில் ₹2.50 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்!

Last Updated : Oct 4, 2018, 04:07 PM IST
பெட்ரோல், டீசல் விலையில் ₹2.50 குறைக்க மத்திய அரசு முடிவு! title=

பெட்ரோல், டீசல் விலையில் ₹2.50 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்!

தொடர்ந்து உயர்வு கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தும் விதமாக உயர்ந்து வரும் எரிவாயு எண்ணைய் விலையில் ரூ.2.50 வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதேவேலையில் ரூபாயின் மதிப்பு  சரிவடைந்து வருகிறது. 

இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இன்று ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ஜெட்லி, "பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசால் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் மீதான வட்டி விகிதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக தான் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. 

கடன் வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை அரசு அதிகரித்துள்ளது. பணவீக்கம் 4% க்கும் கீழே பராமரிக்கப்பட்டு வருகிறது. நிதி அமைச்சகம், பெட்ரோலியத் துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. பல பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இத்தகு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 குறைக்கப்படும். 

அதன்படி பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி ரூ.1.50 மற்றும் எண்ணெய் நிறுவனம் ரூ.1 என மொத்தம் ரூ.2.50 குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News