காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக பிரதிநிதி நியமனம்!!

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் நியமனம்!!

Last Updated : Jun 25, 2018, 05:47 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக பிரதிநிதி நியமனம்!! title=

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் நியமனம்!!

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இது குறித்து அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசின் அதிகாரிகளாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாநில நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்தது. காவிரி ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, கர்நாடகா சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பிரதிநிதிகள் அமைக்கபடாததை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிற்கான தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை அறிவித்து மத்திய அரசு நேற்று அரசாணையை வெளியிட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற உறுப்பினர் கூட்டத்தில் கர்நாடக முதலவர் குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் நியமனம் செய்தார். மேலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக உறுப்பினராக பிரசன்னா-வை நியமித்துள்ளார்.

இதையடுத்து அவர் கூறுகையில், காவிரி ஆணைய விவகாரத்தில் 3 நாளில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் கர்நாடக மாநில எம்பிக்களும் கலந்து கொள்வார்கள் எனவும் முதலவர் குமாரசாமி தெரிவித்தார்.  

 

Trending News