பீகார் படகு விபத்தில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

Last Updated : Jan 15, 2017, 09:23 AM IST
பீகார் படகு விபத்தில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு title=

பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள கங்கை நதி பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மகர சங்கிராந்தி விழாவை கொண்டாடி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 23 ஆக உயர்ந்துள்ளது. படகில் சுமார் 40 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

இந்நிலையில், பீகார் படகு விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தங்களது வருத்தங்களை தெரிவித்துள்ளனர். 

இவ்விருவரும் தமது டிவிட்டர் பக்கத்தில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Trending News