அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும் - வசுந்தரா ராஜே

Last Updated : Jun 27, 2016, 01:10 PM IST
அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெறும் - வசுந்தரா ராஜே title=

2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ஜனதா வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே கூறிஉள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பேசிய முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் செய்ய உள்ளதாகவும், பா.ஜனதா தொண்டர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டுப் பெற உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். கட்சியின் தொண்டர்களே பா.ஜனதாவை ஆட்சி கட்டில் அமரவைத்தனர், அவர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றார். மாநிலம் முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் அடுத்துவரும் தேர்தல்களில் கட்சியை வெற்றிபெற செய்வதை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பில்வாராவில் மாற்று திறனாளி குழந்தைகளை சந்தித்து பேசிய அவர், மாற்று திறனாளி குழந்தைகளையும், முதியவர்களையும் நல்லமுறையில் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார். 

Trending News