‘இந்து பாக்கிஸ்தான்’ சர்ச்சை சசி தரூரின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது

‘இந்து பாக்கிஸ்தான்’ கருத்தின் சர்ச்சையில் சிக்கிய உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூரின் அலுவலகம் கேரளா மாநிலத்தில் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 16, 2018, 06:59 PM IST
‘இந்து பாக்கிஸ்தான்’ சர்ச்சை சசி தரூரின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது title=

‘இந்து பாக்கிஸ்தான்’ கருத்தின் சர்ச்சையில் சிக்கிய உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூரின் அலுவலகம் கேரளா மாநிலத்தில் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கேரளாவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், "2019 ஆம் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பெற்றால், நம்முடைய ஜனநாயகம் பெரும் அழிவை எதிர்கொள்ளும். இந்தியாவின் அரசியலமைப்பை கிழித்து எரியும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும். சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்காத ஒரு "இந்து பாகிஸ்தான்" உருவாவதற்கு வழி வகுக்கும். இந்து ராஷ்டிரா கொள்கைகள் புதிதாக உருவாக்கப்பட்டு இந்திய நாடு இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்". மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், ஆசாத் போன்ற இந்திய விடுதலை போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது நமது நாட்டில் இல்லாமல் போய் விடும்” என பேசி இருந்தார். 

சசி தரூரின் ‘இந்து பாக்கிஸ்தான்’ என்னும் கருத்திற்கு பாஜக பெரும் கண்டனத்தை பதிவு செய்தது. மேலும் இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து, சசி தரூரின் கருத்துக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை கூறப்பட்டது. 

அதுமட்டுமில்லாமல், சுமித் சௌதரி என்பவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சசி தரூர் மீது வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி சசி தரூருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், இன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் நடைபெற்றது போது சசி தரூர் அலுவலகத்தில் இல்லை.

இச்சம்பவம் பற்றி சசி தரூர் கூறுகையில், பாஜ கட்சியை சேர்ந்த யுவமோர்சா மற்றும் சங்கி குண்டர்கள் எனது தொகுதியான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள எனது அலுவலகத்தினை அடித்து நொறுக்கியுள்ளனர். அலுவலகத்தின் மீது என்ஜின் ஆயிலை ஊற்றி உள்ளனர். எனது அலுவலகத்தில் என்னிடம் மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்களை விரட்டி உள்ளனர். எனக்கு எதிராக பேனர்களை வைத்ததோடு, பாகிஸ்தானுக்கு செல்லும்படி கோஷங்களையும் எழுப்பினர். நாம் அனைவரும் எச்சரிக்கப்பட்டுள்ளோம்.

"இந்து ராஷ்ட்ராவின் கனவை நீங்கள் விட்டுவிட்டீர்களா? என்ற எளிமையான கேள்விக்கு பாரதீய ஜனதா அளித்துள்ள பதில் தான், இந்த தாக்குதல் மற்றும் வன்முறை. இன்று அவர்களின் இந்த முகம் திருவனந்தபுரத்தில் வெளிப்பட்டு உள்ளது. பெரும்பாலான இந்துக்கள் இந்த சங்கி குண்டர்கள் நாங்கள்  பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை என்று கூறுவார்கள் என கூறியுள்ளார்.

Trending News