ரேஷன் கார்டுதாரர்களுக்கு பம்பர் செய்தி, இனி இந்த பொருள் கிடைக்கும்

Ration Card: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் (NFSA) கீழ் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் கர்னால், அம்பாலா, யமுனாநகர், ரோஹ்தக், ஹிசார் ஆகிய மாவட்டங்களை கோதுமைக்கு பதிலாக இனி இந்த பொருள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 7, 2023, 03:54 PM IST
  • ரேஷன் கடைகளில் மாவு விநியோகம் செய்ய உத்தரவு
  • ஒரு கார்டில் 35 கிலோ தானியங்கள்
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பம்பர் செய்தி, இனி இந்த பொருள் கிடைக்கும் title=

ரேஷன் கார்டு சமீபத்திய புதுப்பிப்பு: உங்களிடம் ரேஷன் கார்டு இருந்து, அரசால் நடத்தப்படும் இலவச ரேஷன் திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், தற்போது ஒரு முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் அரசால் இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படுகிறது. இதன் கீழ், ஹரியானா அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அது என்னவென்றால் இனி சில மாவட்டங்களில் ஏழைகளுக்கு முழு கோதுமைக்குப் பதிலாக கோதுமை மாவாக வழங்கப்படும். ஆனால், இதற்காக ஒரு கிலோவுக்கு சில ரூபாய் செலுத்தப்பட வேண்டும்.

ரேஷன் கடைகளில் மாவு விநியோகம் செய்ய உத்தரவு
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் ஹரியானாவின் அனைத்து மாவட்டங்களிலும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் கர்னால், அம்பாலா, யமுனாநகர், ரோஹ்தக், ஹிசார் ஆகிய மாவட்டங்களை கோதுமைக்கு பதிலாக முழு கோதுமைக்குப் பதிலாக கோதுமை மாவு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஐந்து மாவட்டங்களிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கோதுமைக்கு பதிலாக இனி வரும் மாதங்களில் கோதுமை மாவு வழங்கப்படும். முன்னதாக ஜனவரியில், இந்த ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 3.35 லட்சம் பேருக்கு மாவு கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, ஹரியானா அரசு ஏழைகளுக்கு கிலோ ரூ.3க்கு மாவு விநியோகம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | வாவ்..ரயில் பயணிகளுக்காக புதிய சேவையா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க 

ஒரு கார்டில் 35 கிலோ தானியங்கள்
இதனிடையே இந்த ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 8.354 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். புதிய விதியின்படி குடும்ப உறுப்பினர் அடிப்படையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாவு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர, கார்டுதாரர்களுக்கு சர்க்கரை, அரிசி பழையபடி தொடர்ந்து வழங்கப்படும். அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு ஒரு கார்டுக்கு 35 கிலோ மற்றும் பிபிஎல் அட்டைதாரர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ என்ற விகிதத்தில் மாவு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து கிலோ ரூ.3க்கு மாவு அரவை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர ரேஷன் கார்டுக்கு ஒரு கிலோ சர்க்கரை ரூ.13.50க்கு வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | விரைவில் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு! எப்படி பதிவிறக்கம் செய்வது? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News