'இந்திய வரலாற்றில் இது முதல்முறை...' முதல்வராக நீடிப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

Delhi CM Arvind Kejriwal Arrest: முதல்முறையாக முதல்வர் பதவியில் இருப்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 22, 2024, 02:08 AM IST
  • கெஜ்ரிவால் வீட்டில் சோதனை மட்டுமின்றி அமலாக்கத்துறை விசாரணையும் மேற்கொண்டுள்ளது.
  • ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரியில் அமலாக்கத்துறை செய்தது
  • அவர் அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்
'இந்திய வரலாற்றில் இது முதல்முறை...' முதல்வராக நீடிப்பாரா அரவிந்த் கெஜ்ரிவால்? title=

Delhi CM Arvind Kejriwal Arrest: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை வியாழக்கிழமை (மார்ச் 21) இரவு அவரது வீட்டில் கைது செய்தது. கைதுக்கு முன்னர் 12க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை வாரண்ட் உடன் வந்து அவரது வீட்டை சோதனையிட்டது மட்டுமின்றி, பணமோசடி தடைச்சட்ட வழக்கின்கீழ் விசாரணையும் மேற்கொண்டனர். சுமார் இரண்டரை மணிநேர விசாரணைக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். 

தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு அவரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினாலும், வெள்ளிக்கிழமை காலையில்தான் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கெஜ்ரிவால் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சிறையில் இருந்து முதல்வர் பணி!

அந்த வகையில் முதல்முறையாக முதலமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை தற்போது கைது செய்துள்ளது. இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அமலாக்கத்துறை கைதுக்கு முன்னரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமலாக்கத்துறை அதிரடி - அடுத்தது என்ன?

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் முதல்வர் பதவி குறித்து, ஆம் ஆத்மி கட்சியில் கெஜ்ரிவாலுக்கு அடுத்த கட்ட தலைவராக பார்க்கப்படும் டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி மர்லினா கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கிறார், அவர் டெல்லியின் முதல்வராகவே தொடர்வார். இதில் யோசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. நாங்கள் முதலில் இருந்தே கூறி வந்தோம், தேவைப்பட்டால் அவர் சிறையில் இருந்து கூட பணியாற்றுவார் என... இதை தடுக்க எந்த சட்டமும் இங்கு இல்லை. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை" என்றார்.

மத்திய அரசின் முடிவு என்ன? 

முதலமைச்சராக பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என கூறப்படும் நிலையில், அவர் சிறையில் இருந்துகொண்டே முதல்வரா பணியாற்றுவது என்பது அரசியலமைப்பு ரீசியாக பிரச்னையை கிளப்பும் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர், லல்லு பிரசாத் யாதவ் பீகாரின் முதல்வராக இருந்த போது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது உடனே அவரது மனைவி ராப்ரி தேவியை முதல்வரக்கினார். 

அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாததன் விளைவுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உற்றுநோக்கி வருவதாக கூறப்படுகிறது. அவர் அரசு ஊழியர் என்பதால், முதல்வர் பதவியில் இருந்து அவரை மத்திய அரசு இடைநீக்கம் செய்யவோ, நீக்கவோ முடிவு செய்யும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அரசு சார்ந்த அதிகாரிகள், யாரும் கைது செய்யப்பட்டால் இந்த நடைமுறை பின்பற்றப்படும். 

மேலும் படிக்க | மோடி அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு (FCU) உச்சநீதிமன்றம் தடை

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள நிலையில், அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திஹார் சிறையில் இருந்து கொண்டு ஆட்சி நடத்தியது இதுவரை யாரும் இல்லை. "சிறையில் இதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை எனவும் சிறை விதிகளின்படி அனைத்தும் பின்பற்றப்படும் " எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, டெல்லி மதுபான முறைக்கேடு வழக்கில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடியும் வரை தன் மீது தண்டனை நடவடிக்கை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். அவ்வாறு பாதுகாப்பு அளிக்க இயலாது என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை இரவு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வருகிறது. 

மேலும் படிக்க | உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்! இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News