தந்தை - சகோதரனை பிணைக் கைதியாக்கி மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர்

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், நானும் என் மகனும் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டோம். இதற்குப் பிறகு, பாலியல் வன்புணர்வு செய்த பிறகு, வயலில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்து எரிக்கப்பட்டன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2021, 08:23 PM IST
தந்தை - சகோதரனை பிணைக் கைதியாக்கி மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் title=

ராஜஸ்தான், பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெண்களுக்கு எதிரான  குற்றம் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றிய செய்திகள் அதிகமாக வருகின்றன. அந்த வரிசையில் மற்றொரு பயங்கரமான சம்பவம் பரத்பூரில் அரங்கேறியுள்ளது. இங்குள்ள மாவட்டத்தின் ஒரு கிராமத்தில், 16 வயதான மைனர் பெண்ணை இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 5 பேர் மீது காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், நானும் என் மகனும் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டோம். இதற்குப் பிறகு, பாலியல் வன்புணர்வு செய்த பிறகு, வயலில் பெட்ரோல் ஊத்தி தீ வைத்து எரிக்கப்பட்டன. 

போலீசார் வழக்கு பதிவு செய்தனர்:
இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி அனில் மீனா கூறுகையில், ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, கிராமத்தின் 5 மர்ம நபர்கள் அவரது மைனர் மகளை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனுடன், 9 பிக்ஹாஸ் அளவுக்கு வயலின் பயிர் தீக்கிரையாக்கப்பட்டது. முழு விஷயமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடந்த காலங்களிலும் இந்த இரு தரப்பினருக்கும் இடையே சண்டைகள் ஏற்பட்டுள்ளது என்றும், போக்சோ வழக்குகள் உள்ளன என்று போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ALSO READ |  பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவே இல்லையா? 2021-ல் 46% அதிகரிப்பு; உ.பி முதலிடம்

அக்டோபர் 17 நள்ளிரவில் நடந்த சம்பவம்:
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் அக்டோபர் 17 அன்று நள்ளிரவில் நடந்ததாகக் கூறப்பட்டு உள்ளது. தற்போது, ​​பாதிக்கப்பட்ட பெண் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், புகாரை பதிவு செய்த பிறகு, போலீசார் இந்த விவகாரத்தில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

போலீசார் கூறுகையில், இந்த விவகாரம் ஒவ்வொரு கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களை தேடும் பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறினார்.

ALSO READ |  14 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News