நாகாலாந்து என்கவுண்டர்: 3 தீவிரவதிகள் சுட்டுக்கொலை

Last Updated : Jun 7, 2017, 10:46 AM IST
நாகாலாந்து என்கவுண்டர்: 3 தீவிரவதிகள் சுட்டுக்கொலை title=

நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் அசாம் ரைபிள் படை வீரர்களுக்கும், என்எஸ்சிஎன் கே தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லாபா பகுதியில் தீவிவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் ராணுவம் நேற்று இரவு தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது. 

அப்போது இருதரப்பு இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 

காயம் அடைந்த 3 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Trending News