Haryana Assembly Election | வாக்குப்பதிவு தொடக்கம்: ஹரியானா சட்டசபை தேர்தல் 2024-ன் 10 முக்கிய அம்சம்

10 Point Of Haryana Assembly Election 2024: ஹரியானா சட்டப்பேரவை 90 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 5, 2024, 10:10 AM IST
Haryana Assembly Election | வாக்குப்பதிவு தொடக்கம்: ஹரியானா சட்டசபை தேர்தல் 2024-ன் 10 முக்கிய அம்சம் title=

Haryana Assembly Elections 2024 Latest Update: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவானது தொடங்கியிருக்கிறது. 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்றைய தினம் தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில், வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஹரியானா மக்கள் ஆற்றி வருகின்றனர். சுமார் இரண்டு கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

1. ஹரியானா சட்டப்பேரவை 90 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

2. இந்தத் தேர்தலில் 101 பெண்களும், 464 சுயேச்சைகளும் என மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

3. ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் 20,632 வாக்குச் சாவடிகளில் 8,821 நூற்றுக்கணக்கானோர் உட்பட 2 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். மொத்த வாக்காளர்களில் 1,07,75,957 ஆண்கள், 95,77,926 பெண்கள், 467 திருநங்கைகள்.

4. கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. 2019 சட்டமன்றத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

5. இன்று (அக்டோபர் 5) வாக்குப்பதிவு முடிவடைந்ததும், ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான எக்ஸிட் போல் கணிப்புகள் இன்று (சனிக்கிழமை) மாலை வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

6. ஹரியானா மாநிலத்தில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்திருக்கக்கூடிய பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த தேர்தலை சந்தித்து வருகிறது. 

7. மறுபுறம் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்தமுறை மீண்டும் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது.

8. கடந்த 2019 முதல் 2024 தொடக்கம் வரை பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) போன்ற கட்சிகளுக்கும், இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கக் கூடும். அவர்கள் கிங்மேக்கர்களாக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

9. தேர்தல் ஆணயத்தின் சார்பாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களை கவருவதற்கான மாடர்ன் போலிங் பூத்துகள் அமைக்கப்பட்டு உள்ளது. மாடர்ன் போலிங் பூத்துகள் மட்டுமல்லாமல், பிங்க் போலிங் பூத்துகளும்  அமைக்கப்பட்டு உள்ளது.

10. வாக்களிக்க 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வரும்பொழுது, அவர்களுக்கு தேவையான வீல் சேர் வசதி மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - அரியானாவில் பாஜகவுக்கு சிக்கல்.. இந்த முறை வெற்றி சாத்தியமா?

மேலும் படிக்க - காங்கிரஸில் வினேஷ் போகத்... ரயில்வே பணியையும் ராஜினாமா செய்தார்... பின்னணி இதுதான்!

மேலும் படிக்க - Viral Video: பேஸ்பால் மட்டையால் மனைவியை இரக்கமின்றி தாக்கிய கணவர்.. ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News