குளிர்காலத்தில் சூப் ஏன் குடிக்க வேண்டும்? 4 காரணங்கள்

குளிர்காலத்தில் சூப் குடிப்பதால் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கும், நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 13, 2022, 07:59 PM IST
  • குளிர்காலத்தில் சூப் ஏன் சாப்பிட வேண்டும்?
  • சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • உடல் வெப்பநிலை சீராக இருக்கும்
குளிர்காலத்தில் சூப் ஏன் குடிக்க வேண்டும்? 4 காரணங்கள் title=

குளிர்காலத்தில் எங்கு பார்த்தாலும் சூப் கடைகளாக இருக்கும். அது சரியான உணவா? ஏன் சூப் குடிக்கிறார்கள்? என்ற கேள்வி அதனைப் பற்றி கேள்விப்படாத பலருக்கும் இருக்கிறது. அப்படியான சந்தேகம் உங்களுக்கு இருந்தால், சூப் மூலம் கிடைக்கும் பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு 

குளிர்காலத்தில், சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், வெப்பநிலை குறைவாக இருப்பதை சூப் குடிப்பதன் மூலம் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கலாம். இதுமட்டுமல்லாமல், சேதமடைந்த திசுக்களை மீட்டெடுக்க உதவுகிறது. குளிர்காலங்களில், ப்ரோக்கோலி, கீரை அல்லது உருளைக்கிழங்கு போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள சூப்களைச் சேர்த்து கொள்ளலாம். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்க்கிருமிகளுக்கு எதிராகவும் பாதுகாக்கவும்.

மேலும் படிக்க | நாள் முழுவதும் சோர்வில்லாமல் பம்பரமாக சுழல ஆற்றலை அள்ளித் தரும் ‘சூப்பர்’ உணவுகள்! 

சளிக்கு சிறந்த நிவாரணி

சளி மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு, சூப், குறிப்பாக சிக்கன் சூப் பரிந்துரைக்கப்படுகிறது. சூப்பில் உள்ள குழம்பு அறிகுறிகளைத் தணிக்க எவ்வளவு உதவுகின்றன. பசியின்மை குறைவாக இருக்கும் போது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது. சளி ஓட்டத்தை அதிகரிக்கும். 

நீரேற்றமாக வைத்திருக்கும்

குளிர்ச்சியாக இருந்தாலும், உங்கள் உடல் செயல்பட குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் உட்கொள்ளலில் கவனம் செலுத்தவில்லை என்றால், குளிர்காலத்தில் கூட நீரிழப்பு ஏற்படலாம். சூப் குடிக்கும்போது உங்கள் உடலில் ஏற்பட்ட நீரிழப்பை தடுக்கலாம் அல்லது சமச்சீராக்கலாம். காய்கறிகளில் இருக்கும் புரதம், போதுமான ஊட்டச்சத்தை கொடுக்கும்.  

புரதத்தின் ஆதாரம்

மாட்டிறைச்சி, கோழி மற்றும் வான்கோழி போன்ற புரதம் நிறைந்த உணவுகளில் சுவையான சூப்களை உருவாக்கலாம். கடல் உணவு சூப்களுக்கு இறால் ஒரு சிறந்த புரதம். சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்து நிறைந்த சூப்களில் இருந்து பயனடையலாம். கீரை போன்ற பல இலை கீரைகளில் வியக்கத்தக்க அளவு புரதம் உள்ளது. பருப்பு வகைகள் புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.

மேலும் படிக்க | 'அந்த’ விசயத்துக்கு மட்டுமில்ல! ‘உடல் பருமன்’ பிரச்சனையையும் தீர்க்கும் அத்திப்பழம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News