மசுதியில் நடைபெற்ற இந்து திருமணம்; கேரளாவில் அதிசயம்!

இனவாத நட்பின் ஒரு நிகழ்ச்சியில், கேரம்குளம், செரவல்லி முஸ்லீம் ஜமாஅத் குழு ஜனவரி 19 அன்று மசூதி வளாகத்தில் ஒரு இந்து திருமணத்தை நடத்தியது தற்போது நாட்டு மக்களின் கவனத்தை இழுத்துள்ளது.

Last Updated : Jan 20, 2020, 12:30 PM IST
மசுதியில் நடைபெற்ற இந்து திருமணம்; கேரளாவில் அதிசயம்! title=

இனவாத நட்பின் ஒரு நிகழ்ச்சியில், கேரம்குளம், செரவல்லி முஸ்லீம் ஜமாஅத் குழு ஜனவரி 19 அன்று மசூதி வளாகத்தில் ஒரு இந்து திருமணத்தை நடத்தியது தற்போது நாட்டு மக்களின் கவனத்தை இழுத்துள்ளது.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பிந்து என்ற பெண்மனி, குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக, தனது மகளுக்கு திருமணம் நடத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். இதனையடுத்து அஞ்சு என்ற தனது மகளின் திருமணத்தை நடத்த உதவி செய்யுமாறு செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை நாடியுள்ளார்.

அந்த தாயின் நிலையை கண்டு, அஞ்சுவின் திருமணத்திற்கு நிதி உதவி அளிக்க சம்மத்தித்ததோடு, மசூதியிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ளவும் மசூதி நிர்வாகம் அனுமதி அளித்தது. 

இதையடுத்து பிந்துவின் மகள் அஞ்சுவிற்கும், சரத் என்ற இளைஞருக்கும் செருவல்லி மசூதி வளாகத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்காக தென்னைக் குலைகளுடன் வாழை மரங்கள் நடப்பட்டு மசூதியில் பந்தல் போடப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இந்து முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி மந்திரங்கள் ஓதி திருமணம் நடத்தப்பட்டது. மசூதி நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது.  

அஞ்சுவின் திருமணத்திற்கு ஜமாஅத் கமிட்டியின் செயலாளர் நுஜுமுதீன் ஆலும்மூட்லே தலைமையிலான அலுவலர்கள் பொறுப்பேற்றனர்.

அஞ்சு மற்றும் சரத் ஆகியோரின் திருமண ஆவணங்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஜமாஅத் குழு விநியோகித்தது. திருமணம் ஒரு மசூதியில் நடந்தது, ஆனால் விழா முற்றிலும் இந்து சடங்குகளுக்கு ஏற்ப இருந்தது. மசூதியில் நடைப்பெற்ற ஒரு இந்து திருமணம் தற்போது நாடு முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News