#காவிரி வரைவு திட்டத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!!

மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், வரைவு திட்டத்தை பருவ காலத்திற்கு முன்பாக செயல் படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது!  

Last Updated : May 18, 2018, 02:33 PM IST
#காவிரி வரைவு திட்டத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!! title=

14:32 18-05-2018
காவிரி ஆணைய தலைமையகம் டெல்லியில் அமையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சி.வி. சண்முகம்..!

காவிரி வழக்கின் தீர்ப்பில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது, தண்ணீர் திறப்பதற்கான முழு அதிகாரமும் ஆணையத்திற்கே உள்ளது

காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் ஒன்றுமில்லை; அதிகாரம் இருக்குமா என பார்க்க வேண்டும் என்றார். 


14:22 18-05-2018

மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், வரைவு திட்டத்தை பருவ காலத்திற்கு முன்பாக செயல் படுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது!


காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 

இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, விரிவான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி வந்ததையடுத்து, கடந்த திங்கள்கிழமை அன்று மத்திய அரசு தரப்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வரைவு திட்டத்தினை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கை தொடர்பாக விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு மே 16ஆம் தேதி  தொடங்கியது!

அதில், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் இரண்டு கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அதாவது, புதிய அமைப்புக்கு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க கோரிய தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் இருக்கக்கூடாது என தமிழகம் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 

பின்னர், காவிரி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்கு மத்திய அரசு இன்று பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, இந்நிலையில், இதன் வழக்கு விசாரணை தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று மேற்கொள்ளப்படுகிறது.இதில், காவிரி வரைவு திட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது!

Trending News