#CauveryIssue: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு கடையடைப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாமக சார்பில் இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க பாமக சார்பில் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

Last Updated : Apr 11, 2018, 09:23 AM IST
#CauveryIssue: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு கடையடைப்பு! title=

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாமக சார்பில் இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்க பாமக சார்பில் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த போராட்டத்துக்கு வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் ஆதரவளிக்க வேண்டும் என்ற அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்க.ஜோதி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த போராட்டத்துக்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் காட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. 

இந்த போராட்டத்தின் எதிரொலியாக புதுச்சேரியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடலூரில் 50,000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

Trending News